சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் வைத்து மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு அவர் திமுகவை சேர்ந்தவர் என கூறியிருந்தார். இதை மறுத்துள்ள அமைச்சர் செழியன், கைதானவர் திமுக நிர்வாகி அல்ல என தெரிவித்துள்ளார்.