நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியை சேர்ந்த வீரமுத்து (65) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 16 வயது நிரம்பிய பள்ளி மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், மாணவி திடீரென மயக்கமடைந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, மாணவியை பரிசோதனை செய்த டாக்டர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரமுத்துவை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் வீரமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.