மதுரை: டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (52) என்பவர் மங்கம்மாள்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக 5 பேர் கும்பல் இவர் கழுத்தை அறுத்து உடலை அங்குள்ள சுடுகாட்டில் போட்டுவிட்டு சென்றனர். ஆனால் தலையை பேரையூர் ரோட்டில் உள்ள ஒயின் ஷாப் பாருக்கு சென்று மது அருந்திவிட்டு அங்கேயே வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் தலையை கண்டு அதிர்ச்சியுற்று போலீசாருக்கு தெரிவித்தனர். இக்கொலையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.