ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலில் 40 பொது மக்கள் இறந்தனர். 750 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 161 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. இரு தரப்பு தாக்குதல்களால் இதுவரை மொத்தம் 201 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.