பாரீஸ் ஒலிம்பிக்-2024ல் இந்தியா மற்றொரு பதக்கத்தை நோக்கி செல்கிறது. சமீபத்தில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதிச் சுற்றில் மொத்தம் 590 புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்தது. இதன்மூலம், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்வப்னில் பெற்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.