குஜராத்: சூரத் மாவட்டத்தில் நேற்று (பிப்.3) ராகுல் பிரமோத், அஞ்சலி குமாரி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இதில், மணமகன் வீட்டு தரப்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகள் குடும்பத்தினர் சாப்பிடுவதற்குமுன் உணவு காலியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திருமணத்தை நிறுத்தினர். இதனால் மணமகன் ராகுல் போலீசில் புகார் அளித்தார். இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில், போலீசார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.