பாகிஸ்தான் மீதான 'ஆபரேஷன் சிந்தூர்' போர் தாக்குதல் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள சூழலில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜம்மு விரைந்துள்ளார். ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய ட்ரோன் தாக்குதல் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் டிரோன்களை இந்தியா நடுவானில் இடைமறித்து அழித்தது. பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பையே இந்தியா அடித்து துவம்சம் செய்து வரும் நிலையில், அடுத்தகட்ட நிலைமையை ஆராய ஜம்முவிற்கு முதலமைச்சர் உமர் அப்துல்லா விரைந்துள்ளார்.