மதுரை உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என அழைக்கப்படும் பழமையான வெங்கடாஜபதி பெருமாள் திருக்கோயிலின் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் 18 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் (மே.19) நடைபெற்றது. 60 அடி உயரமுள்ள திருத்தேருக்கு வர்ணம் பூசப்பட்டு வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமியை திருத்தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.