காங்கோ: ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த வாரம் காங்கோவின் கோமாவிலுள்ள சிறைச்சாலைக்குள் நுழைந்தது. இதனால், ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையிலிருந்து பல ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் தப்பியோடினர். அப்போது, பெண் கைதிகள் இருக்கும் பகுதிக்குள் புகுந்த ஆண்கள், நூற்றுக்கணக்கான பெண்களை பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து அவர்களை உயிருடன் எரித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.