உத்தர பிரதேசம்: ஜிதேந்திரகுமார் - அப்னா தேவி (40) தம்பதியின் மகள் ஷிவானிக்கும் ராகுல் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் வருங்கால மாமியாருடன் ராகுல் காதல் வயப்பட்டு, இருவரும் வீட்டை விட்டு ஓடினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர். இந்நிலையில் ஓராண்டுக்கு முன்னர் ராகுல் வேறு ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடியதும் இரண்டு மாதத்தில் திரும்பி வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.