உத்தமதானபுரத்தில் உள்ள உ. வே. சாமிநாத ஐயா் நினைவு இல்லத்தில் மகா மகோ பாத்தியாய உ. வே. சாமிநாத ஐயா் 170-ஆவது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடி துறை சாா்பில் துணைவேந்தா் பேராசிரியா் திருவள்ளுவன், உ. வே. சாமிநாத ஐயா் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள உ. வே. சாமிநாத ஐயா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைகழக பதிவாளா் (பொ) முனைவா் இளையா பிள்ளை, உ. வே. சாமிநாத ஐயா் தொகுப்பித்த நூல்கள் குறித்துப் பேசினாா். தஞ்சாவூா் சரஸ்வதி மஹால் நூலகப் பண்டிதா் முனைவா் மணிமாறன், உ. வே. சாமிநாத ஐயா் முயற்சியால் பதிப்பிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் குறித்து கூறினாா். மேலும் உ. வே. சா-வின் ஆசிரியா் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிக் கூறினாா். விழாவில், வாா்டுக் குழு உறுப்பினா் அன்பரசன், ஊராட்சி மன்றத் தலைவா் செங்குட்டுவன், தேசிய நல்லாசிரியா் ச. கலைச்செல்வன், ஓய்வுபெற்ற மாவட்ட கருவூல அலுவலா் அன்பழகன், தமிழாசிரியா் செங்கதிா் செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் முனைவா் முருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். முன்னதாக ஓலைச்சுவடிகள் துறை தலைவா் கலா ஸ்ரீதா் வரவேற்றாா். நிறைவில் தமிழ் பல்கலைக்கழக ஓலைச்சுவடி முனைவா் அறிவழகன் நன்றி கூறினாா்.