திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா மற்றும் போலீசார் கண்டமங்கலம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கண்டமங்கலம் மந்தை தெரு பகுதியை சேர்ந்த செல்வராணி (வயது 40) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அதில் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வராணியை கைது செய்தனர்.