தஞ்சை: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

60பார்த்தது
தஞ்சை: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பேரூராட்சி துணைத்தலைவர் வழங்கினார். திருவிடைமருதூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க. சார்பில் உள் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் பேரூராட்சி துணைத்தலைவரும், தி.மு.க. பேரூர் செயலாளருமான சுந்தரஜெயபால் படுக்கை விரிப்புகள், பழங்கள், பால், ரொட்டி உள்ளிட்டவற்றை தலைமை டாக்டரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ரகுபதி, மாவட்டப் பிரதிநிதி ஆனந்தன், கலியமூர்த்தி, தினேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி