அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரால் பொது மக்கள் அவதி. வடிக்கால்கள் மூலம் தண்ணீரை அகற்ற கோரிக்கை அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவில் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த தண்ணீரை வடிகால்கள் மூலம் அகற்ற இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இப்பகுதி பொது மக்கள் கூறியதாவது, அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் ஊராட்சி உள்ளது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மனை பிரிவு மற்றும் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் தற்போது துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. விஷ பூச்சிகளும் இதில் அதிக அளவில் உள்ளது. இதனால் இப் பகுதி குடியிருப்புவாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். விஷப் பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் குடியிருப்பு வாசிகளின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. எனவே இந்த நீரை வடிகால்கள் மூலம் வடிய செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.