ஆர். வி. எஸ். வேளாண்மைக் கல்லூரியில் வேளாண் அருங்காட்சியகம் திறப்பு விழா

256பார்த்தது
ஆர். வி. எஸ். வேளாண்மைக் கல்லூரியில் வேளாண் அருங்காட்சியகம் திறப்பு விழா
பன்னாட்டு அருங்காட்சிய தினத்தை முன்னிட்டு ஆர். வி. எஸ். வேளாண்மைக் கல்லூரியில் வேளாண் அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.
பூதலூர் அருகே உசலம்பட்டியில் உள்ள ஆர் வி எஸ் வேளாண்மை கல்லுரியில் (18. 05. 2023) நேற்று பன்னாட்டு அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட்டது.   இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை கழகத்தின் (NIFTEM)   இயக்குனர் (பொ) மற்றும் முதல்வர் (பொ) முனைவர்      லோகநாதன் கலந்துகொண்டார். கல்லூரியின் முதல்வர், முனைவர்,   பாண்டியராஜன்   சிறப்பு விருந்தினரை கௌரவித்து  விழா தலைமையுரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வேளாண் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்களை எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து ஆர் வி எஸ் வேளாண்மை கல்லுரியில் புதிதாக அமைக்கப்பட்ட  பசுமை ஆற்றல் கழிவு மேலாண்மை அலகையும் சிறப்பு விருந்தினர் திறந்துவைத்தார். முன்னதாக பொருளாதாரத்துறை இணைப் பேராசிரியர் முனைவர். விஜயசாரதி  வரவேற்புரை ஆற்றினார். உதவிப் பேராசிரியர்  லோகநாதன் நன்றியுரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி