தஞ்சாவூர்: மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

77பார்த்தது
தஞ்சாவூர்: மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள கச்சமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியில் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் கச்சமங்கலம் கீழ்த் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 43) என்பதும், மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி