ரம்யா சத்தியநாதன் பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள்.

175பார்த்தது
ரம்யா சத்தியநாதன் பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள்.
தஞ்சாவூர் மாவட்டம்வல்லம் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில்மாவட்டங்களுக்கு இடையேயான கபாடி போட்டி நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிபிஎஸ்இபள்ளிகளைச் சேர்ந்தமாணாக்கர்கள் கலந்து கொண்டனர். 12வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 19வயதிற்குட்பட்டோர் என 3நிலைகளிலான விளையாட்டுப் போட்டிகள் சிபிஎஸ்இ வாரியத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது. பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணைமுதல்வர் சரண்யா, பள்ளி உடற்கல்வி இயக்குநர் முத்துராஜன் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தினர். இப்போட்டிகளில் 12 வயதிற்குட்பட்டோர் போட்டியின் முடிவில், சௌமா பப்ளிக் பள்ளி முதல் இடத்தையும், தூய இதய பன்னாட்டுப் பள்ளி இரண்டாம் இடத்தையும், அரபிந்தோ சிபிஎஸ்இ பள்ளி மூன்றாம் இடத்தையும், ரம்யா சத்தியநாதன் வித்யாஷ்ரம் பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளை ரம்யா சத்யநாதர் கல்வி குழும தலைவர் சத்யநாதன் செயலர் ஜெனரே ரம்யா பாராட்டினார். மற்ற போட்டிகள் திங்கள்கிழமைக்கு மேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி