நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடைக்கால கொண்டாட்ட விழா

77பார்த்தது
நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடைக்கால கொண்டாட்ட விழா
திருவையாறு முழுநேர அரசு கிளை நூலகத்தில்
குழந்தைகளுக்கான கோடைக்கால கொண்டாட்ட விழா

திருவையாறு அரசு கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடைக்கால கொண்டாட்ட விழா நடைபெற்றது. ஒளவை அறக்கட்டளை தலைவர் முனைவர் கலைவேந்தன் தலைமையில் நடைபெற்றது. சம்பந்தம் முன்னிலை வகித்தார். திருவையாறு முழுநேர கிளை நூலகர் தகாமராஜ் வரவேற்றார். உலக தமிழ்கவிஞர் பேரவை துணைப்பொதுச் செயலாளர் வெற்றிப்பேரோளி மாணவ, மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியம் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், வாசகர் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டத்தில் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மாணவ, மாணவிகளை நூலக உறுப்பினர்களாக சேர்த்து அடையாள அட்டை வழங்கப்பட்டது. வாசகர் வட்டத் தலைவர் கார்முகில் பழனிசாமி மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் அணைக்குடி நூலகர் சீனிவாசன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி