தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: திருவையாறு வட்டாரத்தில் வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட கே.ஏ.எஸ். மணி திருமண மண்டபம், தில்லைஸ்தானம் ஊராட்சிக்குள்பட்ட தில்லைஸ்தானம் ஸ்ரீ இராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, வைத்தியநாதன்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட ஆச்சனூர் அரசு உயர்நிலைப் பள்ளி, கண்டியூர் ஊராட்சிக்குள்பட்ட கண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பெரமூர் ஊராட்சிக்குள்பட்ட ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் தொடர்புடைய துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாள்களில் மக்களுக்கு வழங்கப்படும்.