தஞ்சை: ஏப்ரல் 1 முதல் 6ம் தேதி வரை அஞ்சலகம் மூலம் ஆதார் திருத்தம்

58பார்த்தது
தஞ்சை: ஏப்ரல் 1 முதல் 6ம் தேதி வரை அஞ்சலகம் மூலம் ஆதார் திருத்தம்
ஏப்ரல் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை அஞ்சலகம் மூலம் ஆதார் திருத்தம் செய்து கொள்ளலாம் என அஞ்சல்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அஞ்சல் கோட்டம் கீழ் அமைந்துள்ள சுவாமிமலை மற்றும் குத்தாலம் ஆகிய அஞ்சலகங்களில் Project Arrow 2.0 திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனையொட்டி வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் சிறப்பு ஆதார் முகாம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை சுவாமிமலை மற்றும் குத்தாலம் ஆகிய அஞ்சலகங்களில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் புதிய ஆதார் கார்டு மற்றும் ஆதார் அட்டை திருத்தம் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று கும்பகோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி