தஞ்சையில் மது விற்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் விளார் சாலை பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர்கள் மாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரபாகரன் (வயது 32), நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனி பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மணிவண்ணன் (வயது 35) என்பதும் இவர்கள் இருவரும் மது விற்றதும் தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை தெற்கு காவல் உதவி ஆய்வாளர் சத்தியநாதன் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.