தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் (மார்ச். 21) "Stand With Gaza" என்ற பதாகை ஏந்தி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டிக்கும் விதமாகவும் SDPI கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் 24 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தினர். ரமலான் மாதத்திலும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து பதாகை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் ஆண்களும் பெண்களும் ஜமாத்தார்களும் என 820 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இஸ்ரேலை எதிர்த்து கண்டன முழக்கமிட்டனர்.