தஞ்சாவூர்: கேட்பாரற்ற 22 உடல்கள் போலீஸ் முன்னிலையில் அடக்கம்

76பார்த்தது
தஞ்சாவூர்: கேட்பாரற்ற 22 உடல்கள் போலீஸ் முன்னிலையில் அடக்கம்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் உரிமை கோரப்படாமல் இருந்த 22 உடல்களை  காவல்துறையினர் ராஜகோரி மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
தஞ்சாவூர் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக் கல்லூரி காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு விபத்துகளில் காயமடைந்தவர்கள், மயங்கி விழுந்தவர்கள், அடையாளம் தெரியாதவர்கள், ஆதரவற்றோர்,   தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இவர்களது உடல்கள் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதில் 17 ஆண்களும், 5 பெண்களின் உடல்களும் சவக்கிடங்கில் கடந்த சில மாதங்களுக்கு மேல் இருந்தது. இவர்களது உடல்களை பெற யாரும் உரிமை கோராத நிலையில் காவல்துறையினர் இந்த உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நேற்று ராஜகோரி மயானத்தில் 22 உடல்களும் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அப்போது, எஸ். பி. , ரா. ராஜாராம், காவல் ஆய்வாளர் வெ. சந்திரா, கலைவாணி ஆகியோர் 22 உடல்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன், தலைமைக்காவலர்கள் அப்துல்லா, குருமூர்த்தி, சுந்தரமூர்த்தி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி