தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரியில் விண்வெளியில்
இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வேதியியல் துறை தலைவர் ராஜராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரோசி தலைமை வகித்தார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் சித்திரவேல் அறிமுக உரையாற்றினார். இதில் சந்திராயன் - 3, ஆதித்யா எல் - 1
என்ற தலைப்பில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் முன்னாள் இயக்குனரும் சென்னை ஐஐடி கௌரவ பேராசிரியரும் விஞ்ஞானியுமான பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
இந்தியா நிலவின் தென்துருவத்தில் முதன்முதலாக கால் பதித்து சந்திராயன் 3 என்ற செயற்கைக்கோள் உதவியுடன் விக்ரம் லேண்டரை இறங்க வைத்து அதில் இருந்து பிரக்யான் ரோவர் என்பது நிலவில் ஆய்வை மேற்கொண்டது. ஆதித்யா எல் - 1 சூரியனை ஆய்வு செய்கிறது" என்றார். மேலும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் இப்போது இஸ்ரோவில் பல்வேறு ஆய்வுகளை தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வருவருமான சங்கரன் உங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக உள்ளார் என்றார். இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவரும் இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் தெரிவித்தார். மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பேராசிரியர் ஞானசுந்தரம் நன்றி கூறினார்.