பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

51பார்த்தது
பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்டுவதற்கு உள்ள இடையூறுகளை அகற்றிவிட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் அளித்த மனு: தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரத்தில் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் வசித்து வரும் பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ. 19 லட்சம் செலவில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழிலாளர்கள் பணியைத் தொடங்க முற்பட்டபோது, சிலர் இக்கழிப்பறையைக் கட்டவிடாமல் தடுத்தனர். மேலும், மாநகராட்சி ஆணையரும் நிகழ்விடத்துக்கு சென்று பார்வையிட்டு, யாரும் எந்தவித ஆட்சேபனையும் செய்யக்கூடாது என தெரிவித்த பின்னரும், சிலர் தடுத்து வருகின்றனர். இதனால், பணியைத் தொடர முடியவில்லை. எங்களது தெருவில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை இல்லாத காரணத்தால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இடையூறுகளைத் தடுத்து, கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி