தஞ்சையில் அக்டோபர் 10ஆம் தேதி மின் நிறுத்தம்

5419பார்த்தது
தஞ்சையில் அக்டோபர் 10ஆம் தேதி மின் நிறுத்தம்
தஞ்சாவூரில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற அக். 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் மின்வினியோகம் பெறும் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூன் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி சாலை, வ. உ. சி நகர், பூக்கார தெரு, 20 கண் பாலம், கோரிக்குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜே. ஜே. நகர், திரிபுர சுந்தரி நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவ நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி, தெற்கு புதிய ஹவுசிங் யூனிட், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திர நகர், வி. பி. கார்டன், ஆர். ஆர் நகர், சேரன் நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை இயேசு கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி