மருங்குளம் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்துள்ளார். எனவே காலை 9 முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ. வல்லுண்டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கராயன்குடிக்காடு, கோவிலூர், வடக்கூர், சாமிப்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளூர், கீழ உளூர், பஞ்சநதிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் அண்ணசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (26ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 முதல் மாலை 5 மணி வரை ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, ஆர். ஆர். நகர், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திருவேங்கடம் நகர், கரூப்ஸ் நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மனோஜிப்பட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப்நகர், சப்தகிரிநகர், ராஜலிங்கம் நகர், ஐஸ்வர்யா கார்டன், சுந்தரபாண்டியன் நகர், ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.