தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியில் உள்ள பால விநாயகர் கோயிலில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி காவேரி நகர் தெற்கில் அமைந்துள்ள ஆனந்த மகா கணபதி கோயிலில் காலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அங்கிருந்து பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று வங்கி ஊழியர் காலனி பாலவிநாயகர் கோயிலுக்கு சென்றனர். இதையடுத்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர், நகர்வாசிகள் செய்திருந்தனர்