நாகை: ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

70பார்த்தது
புதுச்சேரியில் மாசி மகத்தையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலோரம் முகத்துவாரத்தில் பள்ளி மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இதில் கிருமாம்பாக்கத்தை சேர்ந்த தமிழரசன் என்பவரது 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகன் சபரீஸ்வரன் முகத்துவாரம் ஆற்றுப் பகுதியில் ஆழமான பகுதியில் குளித்த போது திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனால் தடுமாறிப் போன மற்ற இரண்டு மாணவர்கள் கூச்சலிட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக ஆற்றுப்பகுதியில் குதித்து மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டினர். ஆனால் மாணவன் உடல் கிடைக்காததால் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடலை தீவிரமாக தேடினர். நீண்ட தேடலுக்குப் பின் மாணவனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் சபரீஸ்வரனின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைத்தது. இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி