முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துணையாக இருப்பேன்: அமைச்சர்

68பார்த்தது
முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துணையாக இருப்பேன்: அமைச்சர்
அமைச்சராகப் பொறுப்பேற்று முதல் முதலாக தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த உயர் கல்வித்துறை அமைச்சர்
மாவட்ட ஆட்சியரகத்தில் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையின்படியும் சமூக நீதி ஆட்சி நடத்துகிற தமிழக முதல்வர் உயர் கல்வித் துறைக்கு பட்டியலினத்தைச் சார்ந்த ஏழைத் தொண்டனான என்னை நியமித்திருப்பதைத் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உற்றுநோக்குகிறது.

வார்த்தையில் சொல்வது வேறு; செயலில் செய்வது வேறு என்ற நிலையை மாற்றி, தமிழக முதல்வர் என்ன நினைத்தாரோ அதை வார்த்தையில் சொல்லி, சட்டத்தின் மூலமும் செய்து காட்ட முடியும் என்பதைப் பட்டியலினத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித் துறை அமைச்சராக நியமித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வரின் தாய் மண். இந்த மாவட்டத்தின் முழு வளர்ச்சிக்கும் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன் அனைத்து நிலையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தை முதன்மையான மாவட்டமாக முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கு துணையாக இருப்பேன்" என்றார். முன்னதாக அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி