ஒரத்தநாடு திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் தஞ்சையில் வழக்கறிஞராக உள்ளார். சம்பவத்தன்று தஞ்சை கோர்ட் வளாகத்தின் கேட்டின் முன்பு செந்தில்குமார் பணி முடித்து வந்த நீதிபதி உட்பட பலரின் வாகனங்களை வழிமறித்துள்ளார். கோர்ட் ஊழியர் ராஜேஷ் செந்தில்குமாரிடம் காருக்கு வழி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் செந்தில்குமார் வழிவிடாமல் ராஜேஷிடம் தகராறு செய்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.