தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் நில அறிவியல், கடல்சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறை சார்பில் இரு நாள் பன்னாட்டு அளவிலான பயிலரங்கத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பெ. பாரதஜோதி தலைமை வகித்தார். நில அறிவியல் துறைப் பேராசிரியர் க. சங்கர் வாழ்த்துரையாற்றினார். திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ச. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். காந்தி நகர் ஐ.ஐ.டி. தொல்லியல் அறிவியல் பேராசிரியர் வி.என். பிரபாகர், திருச்சி தேசியக் கல்லூரி நிலத்தியல் துறைத் தலைவர் என்.ஜவஹர்ராஜ் பூண்டி, ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர் வி. ரவிச்சந்திரன், குந்தவை நாச்சியார் கல்லூரி புவியியல் துறை இணைப் பேராசிரியர் எஸ். ஸ்ரீகலா ஆகியோர் கருத்துரையாற்றினர்.
முன்னதாக, நில அறிவியல் துறைத் தலைவர் ரெ. நீலகண்டன் வரவேற்றார். நிறைவாக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் வீ. செல்வகுமார் நன்றி கூறினார்.