திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் சார்பில், தஞ்சாவூர் வடக்கு வாசல் அன்பாலயத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி கலந்து கொண்டு உணவு வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது தஞ்சை மேயர் சண். ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட, மாநகர, பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.