திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மைய மாணவர்கள் சார்பில் 16-ம் ஆண்டு திருவாசகம் முற்றோதல் நடைபயணம் திருச்சிற்றம்பலத்தில் இருந்து திருப்பெருந்துறை (புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்) செல்கிறது. முன்னதாக திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிவில் சிவனடியார்கள் திருக்கூட்டம், திருவாசகசபையினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவாசகம் முற்றோதல் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் திருக்கூட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, கறம்பக்குடி மைய சைவ சித்தாந்த சைவத்திருமுறை முன்னாள், இந்நாள் மாணவர்கள் செய்திருந்தனர்.