தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி தீவிரம்

79பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி தீவிரம்
தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியில் கோடை சாகுபடிக்காக நாற்று பறித்து நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சம்பா அறுவடை முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களை தண்ணீர் விட்டு உழவு செய்தும் நாற்றாங்கால் தயார் செய்தும் வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம், பூண்டி உள்ளிட்ட பகுதியில் கோடை சாகுபடிக்காக நாற்று விட்டு அதை பறித்து நடும் பணிகளில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தீவிரம் காட்டினர். 

வயலில் உள்ள களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு உழும் பணிகளிலும், ஒரு சில இடங்களில் நாற்றாங்கால் பறித்து நடவு பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் பலரும் பாய் நாற்றங்கள் பாவும் பணியிலும், சில விவசாயிகள் நாற்று விடும் பணிகளிலும் ஈடுபட்டனர். இதனால் விவசாய பணிகள் தஞ்சாவூர் பகுதியில் முழுமுரமாக நடைபெற்று வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 10,000 ஏக்கரில் கோடை சாகுபடி நடைபெறும். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு சிலர் பம்பு செட்டு வைத்து முப்போகம் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் இடுபொருட்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி