தஞ்சாவூர் யோகநரசிங்கப்பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் கொண்டிராஜபாளையம் யோகநரசிங்கப்பெருமாள் கோயிலில் நேற்று மார்கழி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவர் யோகநரசிங்கப்பெருமாளுக்கும் உற்சவர் லட்சுமி சமேத நரசிம்மருக்கும் சிறப்பு பாலாபிஷேகம், திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரம் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இத்தலத்தில் பிரதி சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதி பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் பக்தர்களுக்கு யோகநரசிங்கப்பெருமாள் யோகங்களை வாரி வழங்குவதாக ஐதீகம். இன்றைய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு யோகநரசிம்மரை தரிசனம் செய்தனர்.