பேராவூரணி: திருச்சிற்றம்பலத்தில் வேன் மோதி.. தொழிலாளி பலி

76பார்த்தது
பேராவூரணி: திருச்சிற்றம்பலத்தில் வேன் மோதி.. தொழிலாளி பலி
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பாரதி நகரை சேர்ந்தவர் நடேசன் (வயது 65) கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை திருச்சிற்றம்பலம் சந்தை ரோடு கடைவீதியில் இருந்து தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து நடேசன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த நடேசன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.