சேதுபாவாசத்திரம் கைவனவயல் காருடை அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 11 நாட்களாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பேராவூரணியில் இருந்து சுமார் 10 கி.மீ தூரம் நடைபயணமாக சுவாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. இரவு கிடாவெட்டு மற்றும் சிறப்பு பூஜைகளும் அக்கினி கப்பரை நிகழ்ச்சியும் நடைபெற்றன.