நசுவினி ஆற்றை தூர்வாரி பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

67பார்த்தது
நசுவினி ஆற்றை தூர்வாரி பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை, வெண்டாக்கோட்டை வழியாக செல்லும் நசுவினி ஆற்றை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அக்னி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, நசுவினி ஆறு, மகா ராஜா சமுத்திரம், நரியாறு,   பூனைக்குத்தியாறு, குண்டலாறு உள்ளிட்ட ஆறுகள் செல்கின்றன.
இந்த ஆறுகள் முழுக்க முழுக்க மழை நீரை ஆதாரமாக கொண்டு ஓடும் காட்டாறுகளாகும். இதற்கான மழை நீர் என்பது திருச்சி மாவட்டம் துவாக்குடி, திருவாரூர் மாவட்டம் வடுவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிடைக்கிறது.
இந்த பகுதியில் பெய்யும் மழைநீரின் வடிகால்களாக காட்டாறுகள் செயல்படுகின்றன.
காட்டாறுகளில் ஓடும்
தண்ணீரை தேக்கி வைப்பதற்கு இதுநாள் வரை பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
பட்டுக்கோட்டைக்கு மிக அருகில் கடற்கரை பகுதிகள் இருப்பதால் தற்போது முதல்சேரி, ராஜாமடம், பழஞ்சூர், புதுக்கோட்டை உள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக மாறி வரும் சூழலில்
குளம், குட்டை மற்றும் ஏரிகளில் நீர் நிரப்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆத்திக்கோட்டை, வெண்டாக்கோட்டை வழியாக செல்லும் நசுவினி ஆற்றை தூர் வாரி பராமரிக்க வேண்டும். வெண்டாக்கோட்டை பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் மண்டிக் கிடக்கும் புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி