தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ நீலகண்டபிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகண்ட பிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா மே 3-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தேரோட்டம் மற்றும் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ள தெப்பத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். ஆகவே, பக்தர்களின் நலன் கருதி பகல், இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில், தற்போது உள்ளதை விட கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.