தஞ்சாவூர் கீழவாசல் முள்ளுக்காரதெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (23). இவர், கீழவாசல் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். செல்வகுமார் நேற்று மதியம் சாப்பிட கடையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (28), ஈஸ்வரமூர்த்தி (30), காக்கா என்கிற சரவணன் (28), ராஜாமுகமது (24), ஆகிய நான்கு பேரும் குடிபோதையில் சென்று செல்வகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அவருக்கு காது கிழிந்துள்ளது. ரத்தத்தைப் பார்த்ததும் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். செல்வகுமார் இறந்துவிட்டார் என பயந்துகொண்டு 4 பேரும் தப்பித்து ஓடிவிட்டனர். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து செல்வகுமார், கிழக்குகாவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.