தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் 965 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனொரு பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே காவல்துறைக்கு சொந்தமான இடத்தில்
போக்குவரத்து பூங்கா (டிராஃபிக் பார்க்) அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ. 50 லட்சம் மதிப்பில் 35 ஆயிரம் சதுரஅடி பரப்பில்
போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டு சுற்றுச்சுவர் நடைபாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. சாலை விதிகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது எந்த பகுதியில் நடந்து செல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு வழிமுறைகள் சாலையை கடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த பூங்காவில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததுசாலை விதிமுறைகள் குறித்தும், அறிவிப்பு பலகைகள்
போக்குவரத்து சிக்னல், சாலை குறியீடு, எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறுவர்கள், பொதுமக்கள் எளிய முறையில்
போக்குவரத்து விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம். தஞ்சாவூரில் சாலை விதிகளை விளக்கும் சிறுவர் பூங்காவில் செடி கொடிகள் மண்டி கடந்தன மேலும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டி கிடந்தன இது குறித்து பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் பூங்கா முழுவதையும் சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்தனர்.