தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 4. 83 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். புதிய கட்டடங்களை திறந்துவைத்து அமைச்சர் பேசுகையில், அரசின் நலத் திட்டங்களை மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார். விழாவில், ஓரத்தநாடு ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் ரூ. 42. 65 லட்சத்தில் கிராம செயலக புதிய கட்டடம், ரூ. 50 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம், மண்டலக்கோட்டை ஊராட்சியில் ரூ. 42. 65 லட்சத்தில் கிராம செயலக புதிய கட்டடம் திருவோணம் ஒன்றியம் திருநல்லூர் ஊராட்சியில் ரூ. 14. 75 லட்சத்தில் அங்கன்வாடி மைய புதிய கட்டடம் உள்பட மொத்தம் ரூ. 4 கோடியே 83 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு அலுவலகங்களுக்கான புதிய கட்டடங்கள் திறக்கப் பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு). கா அண்ணாதுரை (பட்டுக்கோட்டை, என். அசோக்குமார் (பேராவூரணிர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர்கள் பார்வதி சிவசங்கர் (ஒரத்தநாடு), செல்வம் சௌந்தர்ராஜன் (திருவோணம்), பழனிவேல் (பட்டுக்கோட்டை),.
முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்