தஞ்சை: செங்கரும்பு நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்

68பார்த்தது
தஞ்சை: செங்கரும்பு நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது: தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தில் செங்கரும்பு, அச்சுவெல்லம், பச்சரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கரும்புகள் சுமார் ஒரு ஏக்கர் அளவில் பயிர் செய்ய ரூ. 50 ஆயிரம் செலவு ஆகிறது. 

திருவையாறு வட்டம் கண்டியூர் கலியாணபுரம், பொன்னாவரை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், கும்பகோணம் அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் சுமார் 30 ஏக்கர்கள் செங்கரும்பு சாகுபடி செய்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. 

எனவே கூட்டுறவு துறை மூலம் தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக குழு அமைத்து செங்கரும்புகள் சாகுபடி செய்து உள்ள விவசாயிகளிடம் நேரடியாக பேசி கூடுதல் விலைக்கு செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து கரும்புகளை வாங்காமல் நமது மாவட்டத்தில் விளையும் செங்கரும்புகளை நேரடியாக அரசு கொள்முதல் செய்து அனைத்து நியாய விலை ரேஷன் கடைகளிலும் பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி