காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

693பார்த்தது
காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவி புலிப்படை நிறுவனத் தலைவர் போஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பகுதியில் குறுவை பயிர்கள் நீரின்றி கருகி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் காவிரி நீரை உரிய காலத்தில் கர்நாடக அரசு வழங்காமல் உள்ளது. கர்நாடக அரசின் செயல்பாடு தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. தேச நலனை கருத்தில் கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்க வில்லை. எனவே இதில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசிடமிருந்து உடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி