தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை உடனடியாக நியமிக்கக் கோரி ஜனவரி 6 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணிஇடம் காலியாக இருப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் கையொப்பம் இடுவது முக்கியம். இதனால் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளோம்.
தமிழக முதலமைச்சரின் கவனத்தையும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மாற்றுதிறனாளிகளையும் ஒன்றுதிரட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்துள்ளனர். அப்போது சங்க நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் மகாத்மா முஹம்மது செயலாளர் ஜலில் முகைதீன் பொருளாளர் சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.