தஞ்சாவூர்: 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்

79பார்த்தது
தஞ்சாவூர்: 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி கருப்பூர், புலவஞ்சி, ஒலயக்குன்னம், வேப்பங்குளம், வாட்டாகுடி உக்கடை மற்றும் சிரமேல்குடி பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விசைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பேசுகையில், விசைத்தெளிப்பான் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக தங்கள் வேளாண் உதவி அலுவலர்களை அணுகி ஆதார் மற்றும் நில உரிமை ஆவணங்களின் நகல்களை வழங்கி மதுக்கூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார். 

தொடர்ந்து வாட்டாகுடி உக்கடை பஞ்சாயத்தில் 6 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வாட்டாகுடி உக்கடை ஊராட்சி மன்ற தலைவர், வேளாண் உதவி இயக்குனர், வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டு ஆகியோர் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி