தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் தொடர் மழை காரணமாக சில குடிசை வீடுகள் இடிந்தது. விவசாய நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பயிரிடப்பட்ட பயிர்களும் நீரில் மூழ்கி விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒலையகுன்னம், புளியகுடி, பெரியகோட்டை, காரப்பங்காடு, காடந்தங்குடி, சிரமேல்குடி ஆகிய பகுதிகளில் எம்எல்ஏ அண்ணாதுரை, புளியகுடி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளங்கோ, ஆலத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ரூஸ்வெல்ட், மதுக்கூர் வேளாண் துணை இயக்குனர் திலகவதி மற்றும் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் சென்று பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் சுவர்கள் இடிந்த வீடுகளையும் நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கு எம்எல்ஏ அண்ணாதுரை நிதி வழங்கினார்.