தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுக்காடு ஊராட்சி, ஆண்டிவயல் கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளியை, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அலிவலம் அ. மூர்த்தி, சுவாதி காமராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எம். கே. ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் மாதவி, ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா சாமியப்பன், மக்கள் பிரதிநிதிகள், கட்சியினர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.