பட்டுக்கோட்டை தாலுகாவை இரண்டாக பிரிக்க வேண்டி தமிழக முதல்வருக்கு நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் பட்டுக்கோட்டை தாலுகாவில் 9 உள்வட்டங்களும், 166 வருவாய் கிராமங்களும் சேர்த்து 175 வருவாய் கிராமங்கள் உள்ளது
புதிதாக உருவாக்கப்பட்ட திருவோணம் தாலுகாவிற்கு பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து 9 வருவாய் கிராமங்களையும், 9 அலுவலர்களையும் கொடுத்ததாலும்
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தில் திருவோணத்தை சேர்த்ததாலும் ஆர்டிஓ அலுவலகத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வருவதற்கு வடக்கே ஆவிக்கோட்டையில் இருந்து 10 கி. மீ கிழக்கே ராமகோட்டத்தில் இருந்து 20 கி. மீ, தெற்கே உதிரி வயலில் இருந்து 20 கி. மீ, மதன்பட்ட ஊரிலிருந்து 20 கி. மீ பொதுமக்கள் வந்து செல்ல அதிக நேரமும் அதிக செலவும் ஏற்படுகிறது. வருவாய் தீர்வாய் கணக்கு முடிப்பதற்கு 9 நாட்கள் ஆகிறது 2016 ஆம் ஆண்டு தாலுகாவை கிழக்கு மேற்கு என 2 வட்டங்களாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது. நடைமுறைப்படுத்த படவில்லை. எனவே பட்டுக்கோட்டை மக்களின் நலன் கருதியும் நிர்வாக வசதிக்காகவும் பட்டுக்கோட்டையை இரண்டாக பிரிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று நகவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்கத் தலைவர் வீரசேனன் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.